சின்னத்திரை, வெள்ளித்திரை என்று இரண்டி லுமே சரிசமமாக கவனம் செலுத்திவருபவர் நடிகர் பிரஜின். சமீபத்தில் ஓணம் பண்டிகை ரிலீசாக மலையாளத்தில் வெளியாகியுள்ள "லவ் ஆக்ஷன் ட்ராமா' என்கிற படத்தில் வில்லனாக நடித்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் பிரஜின்.

Advertisment

நிவின்பாலி, நயன்தாரா, வினித் சீனிவாசன், அஜு வர்கீஸ் என முன்னணி நட்சத்திரங்கள் நடித் துள்ள இந்தப் படம், ஓணம் பண்டிகை ரிலீசாக வெளியான படங்களிலேயே நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. திடீரென மலையாள படத்தில் வில்லனாக மாறியது எப்படி, இந்தப் படத்தில் நடித்த அனுபவங் கள் எப்படி என்பது குறித்தெல்லாம் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் பிரஜின்...

ee

""மலையாளத்தில் சமீபத்தில் வெளியான "த்ரில்லர்' படம் உட்பட ஏற்கெனவே நான்கு படங் களில் நடித்துள்ளேன், "சண்டக்கோழி' வில்லன் நடிகர் லால் டைரக்ஷனில் மலையாளத்தில் "டோர்ன மெண்ட்' என்கிற படத்தில் வில்லனாக நடித்தபோது, அந்தப் படத்தைப் பார்த்த நகைச்சுவை நடிகர் அஜு வர்கீஸ், எனது நடிப்பை மனதார பாராட்டினார்.

அப்போதுதான் அவரும் "மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்' என்கிற படத்தில் நிவின்பாலியுடன் இணைந்து அறிமுகமாகியிருந்த சமயம். அதன் பிறகு கடந்த ஆறு வருடங்களில் முன்னணி கதாநாயகனாக மாறிவிட்ட அஜு வர்கீஸ்தான், இந்த "லவ் ஆக்ஷன் ட்ராமா' படத்தில் இணைத் தயாரிப் பாளராக இணைந்து தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதா பாத்திரத்தில் வில்லனாக நடிக்க நடிகரைத் தேடிக் கொண்டிருந்தபோது, இத்தனை வருடங்களாக என்னை மறக்காமல் நினைவு வைத்திருந்த அஜு வர்கீஸ் உடனே கேரளாவிற்கு கிளம்பி வரச் சொன்னார். அங்கே போனதும்தான், இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார்கள்.

அதேபோல, நயன்தாராவுடன் இந்தப் படத்தில் இரண்டு காட்சிகளில் இணைந்து நடித்துள்ளேன். ஒரு காட்சியில் அவரை எதிர்த்துப் பேசுவது போல வசனம் பேசியிருந்தேன். ஆனால், ஒருசில காரணங்களால் அது படத்தில் இடம்பெறவில்லை.

தற்போது தமிழில் சீனு ராமசாமியின் உதவியாளர் இயக்கியுள்ள "குன்றத் திலே குமரனுக்கு கொண்டாட்டம்' என்கிற படத்தில் நடித்துள்ளேன். "விஜய் டிவி'யில் மீண்டுமொரு பிரம்மாண்ட மான தொடரில் என்னை எதிர்பார்க்க லாம். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன' என்று சந்தோஷத்துடன் கூறினார் பிரஜின்.